சென்னை: பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் நடத்தப்படும் எம்சிஏ படிப்பின் காலம் 3 ஆண்டு என்பதை 2 ஆண்டுகளாக குறைத்து ஏஐசிடிஇ உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசு அனுமதி பெற்ற பல்கலைக் கழகங்கள், அவற்றுடன் இணைப்பு பெற்ற கல்லூரிகளில் பிசிஏ, எம்சிஏ படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் எம்சிஏ படிப்பு 3 ஆண்டுகள் படிக்க வேண்டும் என்று வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்த படிப்புக்கான காலத்தை 2 ஆண்டுகளாக குறைக்க வேண்டும் என்று பல தரப்பில் இருந்து கோரிக்கைகள் வந்தன.