சென்னை: காசிமேடு உள்ளிட்ட பகுதிகளில் சமூக இடைவெளியுடன் கூடிய மீன்கடைகள் அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம், சென்னை மாநகராட்சி அம்மா மாளிகையில் மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் நடந்தது. இதில் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் மீனவர் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:
முதலமைச்சர் அறிவித்துள்ள தளர்வுகளில் மீன் மார்க்கெட்டுகள் இயங்கலாம். தளர்வை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது. மீன் புரத சத்து மிகுந்த உணவு. மக்களுக்கு அது எளிதாக கிடைக்க வேண்டும். மீன் விற்பனை தொடங்குவது குறித்து மீனவர்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசிக்கப்பட்டு கோரிக்கைகள் கேட்கப்பட்டது.