ஆலந்தூர்: ஈக்காட்டுதாங்கலில் உள்ள அம்மா உணவகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், உணவகம் மூடப்பட்டது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில், தமிழகம் முழுவதும் வரும் 31ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இதில், வாரம்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் தளர்வில்லாத முழு ஊரடங்கு கடைபிக்கப்படுகிறது. இந்த ஊரடங்கு காலத்தில் ஏழை எளிய மற்றும் ஆதரவற்ற மக்கள் பயன்பெறும் வகையில் சென்னையில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், பல அம்மா உணவகங்களில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுவதில்லை, என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், பெண் ஊழியர்கள் பீதியுடன் பணிபுரிந்து வருகின்றனர்.