ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளருக்கு 2வது முறையாக கொரோனா தொற்று

சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளருக்கு 2வது முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிறப்பு காவல் உதவி ஆய்வாளருக்கு 2வது முறையாக தொற்று ஏற்பட்டுள்ளதால் சக காவலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஜூன் 13ம் தேதி கொரோனாவால் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் மீண்டும் தொற்று உறுதியாகி உள்ளது. கொரோனா உறுதியான சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறப்பு காவல் உதவியாளரின் மனைவியும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த சில நாள்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடுமையாக உயர்ந்து வருகின்றது. இந்நிலையில் கொரோனா தடுப்புப் பணியில் இருக்கும் காவல்துறையினர் அதிகளவில் தொற்றுக்கு பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை 1,155 காவலர்கள் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 422 பேர் குணமடைந்து பணிக்குத் திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: