செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த அம்மணம்பாக்கம் கொல்லமேடு பகுதியை சேர்ந்தவர் எட்டி. இவரது மனைவி சந்திரா (60). கடந்த 30ம் தேதி சந்திரா, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு செல்வதாக கூறி சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரை, உறவினர்கள் பல இடங்களில் தேடினர். ஆனால், எந்த தகவலும் இல்லை. இந்நிலையில் கொல்லமேடு சுடுகாடு அருகே மலைப்பகுதியில் தண்ணீரே இல்லாத பாழடைந்த விவசாய கிணற்றில், நேற்று காலை பெண் சடலம் கிடந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.