பெரும்புதூர்: பெரும்புதூர் ஒன்றியத்தில், மதுரமங்கலம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இந்த கூட்டுறவு சங்கத்தின் கட்டுப்பாட்டில் மதுரமங்கலம், ராமானுஜபுரம் உள்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. தற்போது மகளிர் சுய உதவி குழுவில் உள்ள பெண்களின் சுய தொழில் மேம்பாட்டுக்காக கடனுதவி வழங்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து மதுரமங்கலம், ராமானுஜபுரம் ஆகிய ஊராட்சியில் உள்ள 7 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தலா 5 லட்சம் என 35 லட்சம் கடனுதவி மதுரமங்கலம் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி வளாகத்தில் நடந்தது.