திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த புன்னப்பாக்கம் கிராமத்தில் உள்ள ஊராட்சி குளத்தை ஆக்கிரமித்து சிலர் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம், ஊராட்சி தலைவர் சுந்தரமூர்த்தி மனு கொடுத்தார்.
அந்த மனுவின் விவரம்: திருவள்ளூர் ஒன்றியம் புன்னப்பாக்கம் ஊராட்சியில், 6 ஏக்கர் பரப்பளவில் ஊராட்சிக்கு சொந்தமான குளம் உள்ளது. மழைக்காலங்களில் குளத்தில் சேகரிக்கப்படும் நீரினால், நிலத்தடிநீர் உயர்ந்து, இப்பகுதி மக்கள் குடிநீர் பிரச்னை இன்றி இருந்தனர்.