சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: திருவள்ளூர் மேற்கு மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியம் வாயலூர் காலனி கருமாரியம்மன் கோயில் தெரு கிளை செயலாளர் எஸ்.சிலம்பரசன் முன்விரோதம் காரணமாக அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றோம்.