திருவொற்றியூர்: கொரோனா பரவலை தடுக்க சென்னையில் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நேரத்தில் அவசியம் இல்லாமல் வெளியே சுற்றுபவர்களுக்கு அபராதம் விதிப்பது, வாகனங்களை பறிமுதல் செய்வது போன்ற பணிகளில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், மருத்துவமனை மற்றும் அவசர தேவைக்கு கூட வாகனத்தில் செல்பவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி, வாகனங்களை பறிமுதல் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மணலி மார்க்கெட் சந்திப்பில் நேற்று போக்குவரத்து போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அந்த வழியாக பைக்கில் தனது தாயுடன் வந்த வாலிபரை ஊர்க்காவல் படையினர் தடுத்து நிறுத்தினர். அப்போது, ‘‘தாய்க்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனைக்கு செல்கிறேன்,’’ என அந்த வாலிபர் கூறியுள்ளனர்.