சென்னை: தமிழ்நாடு அரசு அறிவித்த 3000 உதவித்தொகையை இளம் வக்கீல்கள் பெறுவதற்கான தகுதியை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் அறிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட இளம் வக்கீல்களுக்கு 2 ஆண்டு காலத்திற்கு மாதம் 3000 உதவித்தொகை வழங்கப்
படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இந்த உதவித்தொகை பெறுவதற்கான தகுதி மற்றும் விண்ணப்பித்தல் குறித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் நேற்று கூறியதாவது: முதல்வரின் அறிவிப்புக்கு, பார்கவுன்சில் சார்பிலும் வக்கீல்கள் சமுதாயத்தினர் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த உதவித்தொகையை பெற இளம் வக்கீல்கள் தமிழ்நாட்டில் உள்ள அரசு சட்ட கல்லூரியில் சட்டம் படித்திருக்க வேண்டும்.