திருமலை: ஒஸ்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி நிர்வாகி கொலை வழக்கில் முன்னாள் அமைச்சர் நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஆந்திர மாநிலம், மசூலிப்பட்டினம் தொகுதி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி நிர்வாகியான பாஸ்கர்ராவ் கடந்த 5 நாட்களுக்கு முன்பு நடுரோட்டில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் இதுவரை 5 பேரை கைது செய்தனர். மேலும், முக்கிய குற்றவாளியான தெலுங்கு தேசம் கட்சி முன்னாள் அமைச்சர் கொல்லுரவீந்திரா மீது வழக்கு பதிவு செய்தனர்.