ஒய்எஸ்ஆர் காங். நிர்வாகி கொலை தெ.தேசம் முன்னாள் அமைச்சர் கைது

திருமலை: ஒஸ்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி நிர்வாகி கொலை வழக்கில் முன்னாள் அமைச்சர் நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஆந்திர மாநிலம், மசூலிப்பட்டினம் தொகுதி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி நிர்வாகியான பாஸ்கர்ராவ் கடந்த 5 நாட்களுக்கு முன்பு நடுரோட்டில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் இதுவரை 5 பேரை  கைது செய்தனர். மேலும், முக்கிய குற்றவாளியான தெலுங்கு தேசம் கட்சி முன்னாள் அமைச்சர் கொல்லுரவீந்திரா மீது வழக்கு பதிவு செய்தனர்.  

இந்நிலையில், போலீசார் நேற்று காலை அவரை கைதுசெய்ய அவரது வீட்டிற்குச் சென்றனர். அவர் அங்கு இல்லை. அங்கிருந்த அவரது செல்போனை பறிமுதல் செய்தனர். மேலும் அவர் விசாகப்பட்டினத்திற்கு செல்வதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து,   கிழக்கு கோதாவரி மாவட்டம், சீதாபுரத்தில் காரில் சென்று கொண்டு இருந்தது தெரிந்தது. அவரை மடக்கி பிடித்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: