ஆவடி: ஆவடி, ஸ்ரீ தேவி நகரை சேர்ந்தவர் இளங்குமரன். பாதுகாப்பு துறை ஊழியர். இவர் மனைவி பிரிந்து வாழ்கிறார். இவரது மகள் திவ்யா (18). போரூரில் உள்ள தனியார் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் முதல் ஆண்டு படித்து வந்தார். திவ்யா, ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள தனியார் விடுதியில் தங்கி படித்து வந்தார். இதற்கிடையில், திவ்யா, தன்னுடன் படிக்கும் சக மாணவனை காதலித்துள்ளார். இந்த விவரம் அவரது தந்தைக்கு தெரியவர மகளை கண்டித்துள்ளார். எனவே திவ்யா மனமுடைந்த நிலையில் இருந்துள்ளார்.