உதவி பொறியாளருக்கு கொரோனா தொற்று: காக்களூர் மின்வாரிய அலுவலகம் மூடல்

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த காக்களூர் மின்வாரிய அலுவலகத்தில், உதவி பொறியாளர் ராஜேஸ்வரி உட்பட 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள்  பணியில் உள்ளனர். இதில், தினமும் பணிக்கு வந்த உதவி பொறியாளர் ராஜேஸ்வரிக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மற்ற பணியாளர்களுக்கு நேற்று திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து மின்வாரிய உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில், காக்களூர் மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. தொடர்ந்து, அலுவலக நுழைவு வாயில் கேட் மூடப்பட்டு பூட்டு  போடப்பட்டது. தொடர்ந்து 4 நாட்கள் அலுவலகத்திற்கு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Related Stories: