திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த காக்களூர் மின்வாரிய அலுவலகத்தில், உதவி பொறியாளர் ராஜேஸ்வரி உட்பட 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் உள்ளனர். இதில், தினமும் பணிக்கு வந்த உதவி பொறியாளர் ராஜேஸ்வரிக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மற்ற பணியாளர்களுக்கு நேற்று திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.