கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே கண்ணன்கோட்டை பகுதியை சேர்ந்தவர் முருகன் (40). கடந்த 19ம் தேதி நடந்த சாலை விபத்தில் படுகாயம் அடைந்த முருகனை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 29ம் தேதி முருகன் உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்கள் முன்னிலையில் அடக்கம் செய்யப்பட்டது.