கும்மிடிப்பூண்டி அருகே விபத்தில் இறந்த வாலிபருக்கு கொரோனா பாதிப்பு உறுதி: உறவினர்கள் அதிர்ச்சி

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே கண்ணன்கோட்டை பகுதியை சேர்ந்தவர் முருகன் (40). கடந்த 19ம் தேதி நடந்த சாலை விபத்தில் படுகாயம் அடைந்த முருகனை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 29ம் தேதி முருகன் உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்கள் முன்னிலையில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்தநிலையில், முருகன் உடல் பரிசோதனை அறிக்கையில் கொரோனா நோய்தொற்று இருப்பது உறுதியானதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட 200க்கும் மேற்பட்ட உறவினர்களுக்கு கடும் அதிர்ச்சியில் உள்ளனர். இதுகுறித்து ஸ்டான்லி அரசு மருத்துவமனை நிர்வாகத்திடம் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Related Stories: