சென்னை: பரமக்குடி, உளுந்தூர்பேட்டை அதிமுக எம்எல்ஏக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தொகுதி அதிமுக எம்எல்ஏ சதன் பிரபாகர். இவருடன் கொரோனா நிவாரணப் பணியில் ஈடுபட்ட, இளைஞர் ஒருவருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் எம்எல்ஏ சதன் பிரபாகர், அவருடைய மகன் உள்பட அதிமுகவை சேர்ந்த 10 பேர் கடந்த 30ம் தேதி பரிசோதனை செய்து கொண்டனர். இதன் முடிவு நேற்று வெளியானது. இதில் எம்எல்ஏ சதன் பிரபாகர், அவரது மகன், உதவியாளர் ஆகிய 3 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.இதைத் தொடர்ந்து, மூவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பரமக்குடி ஓட்டப்பாலம் பகுதியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகமும் மூடப்பட்டது.