சென்னை: தமிழகத்தில் கொரோனா சமூக பரவலாக மாறவில்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். நேற்று அளித்த பேட்டி: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 56,021 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ெகாரோனா வைரஸ் தொற்றை குணப்படுத்த மருந்து இல்லாத நிலையில் 56 ஆயிரம் பேரை குணப்படுத்தி உள்ளோம். நோய் அறிகுறி உள்ளவர்கள் மற்றும் நோய் இல்லாதவர்களுக்கு உள்ளிட்ட அனைவருக்கும் ஒரே மாதிரியான சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இணை நோய்கள் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிப்பது சவலாக உள்ளது.