சென்னை: வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்கள், சொந்த ஊர்களுக்கு திரும்ப ஏதுவாக தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில், விமானங்கள் தரையிறங்க அனுமதி வழங்க உத்தரவிடக் கோரி திமுக செய்திதொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதே கோரிக்கையுடன் ராஜா முகமது என்பவரும் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்குகள் நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், இன்னும் 27,956 பேரை அழைத்து வர வேண்டியுள்ளது. அதற்கு 158 விமானங்கள் இயக்கப்பட வேண்டியுள்ளது. ஆனால், விமானங்கள் தரையிறங்க மாநில அரசு ஒப்புதல் வழங்கவில்லை என மத்திய அரசு புகார் தெரிவித்துள்ளது. தமிழக அரசு சார்ட்டர்ட் விமானங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கிறது. வெளிநாடுகளில் இந்திய குடிமக்கள், சாலைகளிலும், பூங்காக்காலிலும் தான் தூங்குகின்றனர் என்றார்.தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் எஸ்.ஆர்.ராஜகோபால், தமிழக அரசு ஒப்புதல் வழங்கவில்லை என்பது தவறு. ஒரு நாளுக்கு 7 விமானங்கள் இயக்கப்படுகிறது.