ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி கொரோனா சிறப்பு மருத்துவமனையில தனிமைப்படுத்தபட்டவர்களுக்கு போதிய உணவு, குடிநீர் வழங்கப்பட வில்லை என்ற குச்சாட்டு எழுந்துள்ளது. தங்களுடைய குழந்தைகளுக்கு பாலும் வழங்கப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். குறிப்பிட்ட நேரத்திற்கு உணவு, மருந்துகள் வழங்கப்படவில்லை என்றும் வார்டில் இருப்பவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். உணவு போதிய அளவு இல்லை என்றும் அவர்கள் வீடியோவின் மூலம் புகார் தெரிவித்துள்ளனர்.