கார் விபத்தில் பலியான கட்டிட மேஸ்திரி குடும்பத்துக்கு ரூ.22 லட்சம் இழப்பீடு

சென்னை: சென்னையை சேர்ந்தவர் மணி. கட்டிடம் கட்டும் மேஸ்திரியாக வேலை செய்து வந்தார். இவர் கடந்த 2014ல் வேலை முடித்துவிட்டு இரவில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது வேகமாக வந்த கார் ஒன்று மணி மீது மோதியது. அதில் அவர் தூக்கி வீசப்பட்டு, பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில், அவரது மனைவி கணவன் மரணத்திற்கு இழப்பீடு கோரி, சென்னையில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி சுதா முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையில், மணியின் வயது 44 என்பதும், கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து மாதம் ரூ.50 ஆயிரம் சம்பாதித்து வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து நீதிபதி, கட்டிட மேஸ்திரி குடும்பத்துக்கு ரூ.22 லட்சத்து 60 ஆயிரம் இழப்பீடு வழங்க கோரி இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டார்.

Related Stories: