செங்கல்பட்டு: காஞ்சிபுரம் மாவட்டமாக இருந்த போது மாவட்டம் முழுவதும் தனிப்பிரிவு போலீசாராக சிலர் 3 ஆண்டுகளை கடந்து ஒரே காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தனர். கடந்த 6 மாதத்துக்கு முன் காஞ்சிபுரம் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு, செங்கல்பட்டு தனி மாவட்டமாக செயல்படுகிறது. இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டகாவல் நிலைங்களில் உளவுப்பிரிவு காவலர்களாக (எஸ்பி) இருந்தவர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வந்தன. இதையடுத்து, எஸ்பி பிரிவில் இருந்த 16 பேர் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதையொட்டி, சட்டம் ஒழங்கில் இருந்த பலரை எஸ்பி பிரிவுக்கு மாற்றி எஸ்பி கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.அதன் விவரம்.