சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் காஞ்சிபுரம், வேடபாளையம், திம்மாவரம் ஆகிய இடங்களில் நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகள் செயல்படுகின்றன. இங்கு 300க்கும் மேற்பட்ட சுமைதூக்கும் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். சுமைதூக்கும் தொழிலாளர்களை நுகர்பொருள் வாணிபக் கழக துணை பதிவாளர் தொடர்ந்து அவதூறாக பேசி வந்ததாக கூறப்படுகிறது. துணைப் பதிவாளரின் இந்த அலட்சிய போக்கைக் கண்டித்து, அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் சுமைதூக்கும் தொழிலாளர்கள்  வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஊரடங்கு அமலில் உள்ள சூழலில் ரேஷன் கடைகளுக்கு உணவு பொருள் சப்ளை பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Related Stories: