திருமங்கலம்: திருமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. மாலையில் துவங்கி நள்ளிரவு வரையில் பெய்து வரும் மழையால் கண்மாய்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக திருமங்கலம் தாலுகாவில் முதலில் நிரம்பும் அம்மாபட்டி கண்மாய்க்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதேபோல் பொன்னம்பட்டி, உரப்பனூர் கண்மாய்களிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. மழை தொடரும்பட்சத்தில் முக்கிய கண்மாய்கள் நிரம்பும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.