ஒதிக்காடு ஏரி குடிமராமத்து பணி தொடக்கம்

திருவள்ளூர்: திருவள்ளூர் ஒன்றியம், ஒதிக்காடு ஏரி ரூ.26.50 லட்சம் மதிப்பீட்டில் குடிமராமத்து பணி செய்வதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் ஊராட்சிமன்றத் தலைவர் தா.ரோஜா தாமஸ் தலைமை தாங்கினார். ஏரி சங்கத்தலைவர் ஓ.ஆர்.பிரகாஷ், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சீனிவாச பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஏ.லூகாஸ், சத்யராஜ், வக்கீல் மதுரை வீரன், ஒய.மோசஸ், டி.பிராங்கிளின், எஸ்.தேவநேசன், எம்.பாஸ்கர், அதிமுக நிர்வாகி பாலசுந்தரம், மதிமுக நிர்வாகி அம்பேத், லோகு, விவசாயிகள் கோதண்டன், சிதம்பரம், சுரேஷ், ஜெயவேல், ஊராட்சி செயலர் ஐயப்பன், பொதுப்பணித்துறை உதவியாளர் தாமோதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: