காரைக்குடி: கொரோனா ஊரடங்கால் காரைக்குடியில் செட்டிநாடு சேலைகள் விற்பனை செய்ய முடியாமல் முடங்கியதால் ரூ.50 லட்சத்திற்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கானாடுகாத்தான் உள்ளிட்ட பகுதிகளில் செட்டிநாடு பாரம்பரிய கைத்தறி நெசவுக்கூடங்கள் அதிகளவு செயல்படுகின்றன. வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள், சினிமா படப்பிடிப்புக்கு வருபவர்கள் சேலைகளை அதிகளவில் விரும்பி வாங்கி செல்வர். தற்போது ஊரடங்கால் சுற்றுலாப்பயணிகள் வருகை தடைபட்டுள்ளது. இதனால் செட்டிநாடு சேலைகள் விற்பனையாகாமல் முடங்கியுள்ளன. இதனை நம்பியுள்ள 100க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் வேலையிழந்துள்ளனர். நெசவாளர் வெங்கட்ராமன் கூறுகையில், ‘‘காரைக்குடியில் கட்டிடங்களை பார்க்க வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் வருவர்.