கொரோனாவுக்கு திமுக பிரமுகர் பலி

தாம்பரம்: தாம்பரம் 32வது வட்ட திமுக பிரதிநிதியான 64 வயது முதியவருக்கு கடந்த வாரம் மூச்சு திணறல் ஏற்பட்டதால் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 28ம் தேதி உயிரிழந்தார்.

இந்நிலையில், அவரது மருத்துவ பரிசோதனை முடிவு நேற்று வெளியானது. அதில், கொரோனா தொற்று இருப்பது தெரிந்தது. அதனால், சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தலின்படி, உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Related Stories: