சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பணியிட மாற்றம் செய்து தமிழக தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். பெருநகர காவல் ஆணையராக ஏ.கே.விஸ்வநாதன் 3 ஆண்டுகள் கடந்து பணியாற்றியுள்ளார். 2017-ம் ஆண்டு மே 15-ம் தேதி சென்னை காவல் ஆணையராக ஏ.கே.விஸ்வநாதன் நியமிக்கப்பட்டார். ஏ.கே.விஸ்வநாதன் தமிழக செயலாக்கம் பிரிவு ஏடிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை பெருநகர காவல் ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் மொத்தம் 39 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மத்திய மண்டல ஐஜியாக இருந்த அமல்ராஜ் சென்னை ஆணையரகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மதுரை மாநகர காவல் ஆணையராக இருந்த பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதுரை மாநகர காவல் ஆணையராக இருந்த டேவிட்சன் தேவ ஆசிர்வாதம் பணியிட மாற்றம் செய்யப்படடுள்ளார்.