சென்னை: பொன்னேரி அடுத்த வஞ்சிவாக்கத்தை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (27), கூலித் தொழிலாளி. இவரது மனைவி ஜெயலட்சுமி, திருமணமாகி 5 ஆண்டுகள் ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ரஜ்சித்குமார் தினமும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வருவதாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே தகராறு வருவது வழக்கம். அதன்படி ரஞ்சித்குமார், நேற்று மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்ததால் மனைவி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரஞ்சித்குமார், மனைவியை கைது செய்ய வலியுறுத்தி திருப்பாலைவனம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.