மின்சாரம் பாய்ந்து சிறுமி பரிதாப பலி

துரைப்பாக்கம்: துரைப்பாக்கம் கண்ணகி நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகள் யாஷினி (4). நேற்று ஏழுமலை குளிப்பதற்காக ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் வாட்டர் ஹீட்டரை போட்டுள்ளார்.

தண்ணீர் சூடான பிறகு சுவிட்சை அணைக்காமல் வாட்டர் ஹீட்டரை எடுத்து தரையில் வைத்து விட்டு, குளிப்பதற்காக தண்ணீரை எடுத்து சென்றுள்ளார். அப்போது, வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த யாஷினி எதிர்பாராவிதமாக வாட்டர் ஹீட்டரை பிடித்ததால், மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தாள்.

Related Stories: