கோவை: கோவையில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதிக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் சுந்தரரேஷ், கிருஷ்ணகுமார் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த வழக்கில், சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டு தற்போது பிரிந்திருக்கும் கார்த்திகேயன் மற்றும் தமிழினியை ஒரு வாரத்திற்குள் கோவை மாவட்ட நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஆஜராகும் போது யாருடைய தலையீடும் இல்லாமல் அவர்கள் இருவரை மட்டுமே வைத்து விசாரித்து உரிய உத்தரவை கோவை மாவட்ட நடுவர் நீதிமன்ற நீதிபதி பிறப்பிக்க வேண்டும் என்று ஆணையிடப்பட்டுள்ளது.