சென்னை: வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் அருகே இயங்கும் மருந்து நிறுவனத்தால் நீர் நிலைகளில் மாசு ஏற்படுகிறதா என ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தனியார் மருந்து நிறுவனத்தினால் வேடந்தாங்கல் ஏரி மற்றும் அதனை சுற்றியுள்ள நீர் நிலைகளில் மாசு ஏற்படுகிறதா எனவும் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய குழு அமைத்து தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.