தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்க அரசுக்கு பரிந்துரைக்கவில்லை: மருத்துவ நிபுணர் குழுவினர் பேட்டி

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்க அரசுக்கு பரிந்துரைக்கவில்லை என்று மருத்துவ நிபுணர் குழுவினர் பேட்டியளித்துள்ளனர். மேலும் தமிழகம் முழுவதும் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க பரிந்துரை. திருச்சி, மதுரை, வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இரட்டிப்பாகும் வேகம் குறைந்திருப்பது நல்ல அறிகுறி. மேலும் சென்னையை தொடர்ந்து திருச்சி, மதுரை, வேலூர் , திருவண்ணாமலையில் பரிசோதனையை அதிகரிக்க மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: