சென்னை: கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 3 மாதத்தில் கோயில்களுக்கு வர வேண்டிய ரூ.175 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 44,121 கோயில்கள் உள்ளது. இதில், ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கு மேல் வருவாய் வரும் கோயில்கள் மொத்தம் 234. ரூ.2 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வருவாய் உள்ள கோயில்கள் 557. ரூ.10 ஆயிரம் முதல் 2 லட்சத்துக்குள் வருவாய் உள்ள கோயில் 3402. இக்கோயில்களின் சொத்துக்கள் மூலம் வருவாய், உண்டியல் வருவாய், தரிசன டிக்கெட்டுகள், பிரசாத விற்பனை மூலம் ஆண்டுக்கு ரூ.600 கோடி வரை வருவாய் பெறப்படுகிறது.