சென்னை: சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்தில் பயணிகள் இல்லாமல் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. பல விமானங்கள் குறைந்த பயணிகளுடன் காலியாகவே பறந்தன. முழு ஊரடங்கு காரணமாக சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் வருகை, புறப்பாடுகளில் பயணிகள் எண்ணிக்கை 50 சதவீதத்திற்கும் கீழ் குறைந்துவிட்டது. இதையடுத்து விமானங்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு முனையத்தில் கடந்த 19ம் தேதி முழு ஊரடங்கு தொடங்கும் முன்பு வரை 66 விமானங்கள் இயக்கப்பட்டு, 6 ஆயிரத்திற்கும் அதிகமான பயணிகள் பயணித்தனர்.