சென்னை: சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழப்பு சம்பவம் தமிழக காவல்துறைக்கு ஏற்பட்டுள்ள களங்கம் என்று தமிழக பாஜ தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்தில் நீதி கிடைக்கும் என்று நம்பிக்கை உள்ளது. இருவரின் மரணமும் தமிழகத்தில் அனைத்து தரப்பினரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த மரணங்களை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. இந்த சம்பவத்தில் குற்றம் புரிந்தோர் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.