சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் போலீசாரின் செயலை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்: ராகுல்காந்தி கருத்து

சென்னை: சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்திற்கு காரணமான போலீசாரின் செயலை அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன் என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கை: ஊரடங்கின் போது அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து செல்போன் கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி விசாரணைக்கு அழைத்து சென்று காவல் நிலையத்தில் ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் அடித்து படுகொலை செய்யப்பட்டனர்.

இவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிற வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள  சக்தித் திட்ட உறுப்பினர்களுக்கு மட்டும்  ராகுல் காந்தி அனுப்பிய குறுஞ்செய்தியில் கூறியிருப்பதாவது: சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்திற்கு காரணமான போலீசாரின் செயலை அறிந்து வருத்தமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். இதற்கு, காரணமானவர்களுக்கு தகுந்த தண்டனை கிடைக்கும் வரை போராடுவோம். இன்று (நேற்று) இரவு 7 மணிக்கு உங்கள் வீட்டின் முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி மறைந்த சகோதரர்களுக்கு அஞ்சலி செலுத்துமாறு வேண்டுகிறேன். நான் நேரில் வந்து ஆறுதல் கூற கொரோனா சூழலால் இயலவில்லை.

Related Stories: