சென்னை: மத்திய பாஜக அரசின் முதல் ஆண்டு சாதனை விளக்கி அகில இந்திய பொதுச்செயலாளர் முரளிதரராவ் தமிழக பாஜகவினர் மத்தியில் காணொலி காட்சி மூலம் பேசியதாவது: முத்ரா வங்கித் திட்டத்தில் ரூபாய் 75 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு 2 கோடி பயனாளிகள் என தமிழகத்தில் பயன்பெற்றுள்ளனர். முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் பிரதமரை பற்றி பேசுவதற்கு தகுதி இல்லை. சீனாவிடம் இந்தியாவின் பெரும்பகுதி பறிகொடுக்கப்பட்டது காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தான் என்பதை சிதம்பரம் உணரவேண்டும்.