பல்லாவரம்: பல்லாவரம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற உள்ள ஜமாபந்தி நிகழ்ச்சிக்கு, பொதுமக்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம், என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல்லாவரம் சுற்று வட்டார பகுதிகளான பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர், குரோம்பேட்டை ஆகிய பகுதி மக்கள், தங்களது பட்டா பெயர் மாற்றம், சிட்டா அடங்கல், புதிய பட்டா பெறுதல் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு பல்லாவரம் தாலுகா அலுவலகம் வருகின்றனர். இந்நிலையில், வரும் 29ம் தேதி அரசு சார்பில், ஜமாபந்தி நிகழ்ச்சி பல்லாவரம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற உள்ளது.