கடும் அழுத்தத்தால் ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கை முதல்வர் CBI விசாரணைக்கு மாற்றம்: ஸ்டாலின்

சென்னை: பொதுமக்கள், அரசியல் கட்சிகள் மற்றும் ஊடகத்தினரின் கடும் அழுத்தத்தால் ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கை முதல்வர் CBI விசாரணைக்கு மாற்றியுள்ளார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நீதி வழங்கும் அரசியல் துணிவும், முதுகெலும்பும் அரசுக்கு இருந்திருப்பின் உயிர்பறித்த காவல்துறையினர்  இப்போதும் சுதந்திரமாக உலவ முடியுமா? என கேள்வி எழுப்பியுள்ள அவர் இரு அப்பாவிகளின் உயிர் பறிக்கப்பட்டிருப்பதற்கும் அவர்களது குடும்பத்திற்கும் நீதி வழங்க வேண்டும் எனில், அவர்களின் கோரிக்கையை ஏற்று IPC 302-ன்கீழ் கொலை வழக்குப் பதிவு செய்து- சம்பந்தப்பட்ட காவல்துறை உதவி ஆய்வாளர்கள் மற்றும்  போலீசாரை உடனே கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: