டெல்லியில் இருந்து வந்த 4 வாலிபர்கள் தனிமைபடுத்தப்பட்டனர்

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் பகுதியில், டெல்லியிலிருந்த வந்த நான்கு வாலிபர்களை சுகாதார துறையினர் தனிமைப்படுத்தி உள்ளனர்.திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் பட்டறை பகுதியில் உள்ள கிரானைட் வணிக வளாகத்திற்கு, டெல்லியில் இருந்து நான்கு வாலிபர்கள் கடந்த 23ம் தேதி ராஜதானி விரைவு ரயிலில் வேலைக்கு வந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த வட்டார சுகாதார மருத்துவர் ராகவ், சுகாதார மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன் மற்றும் சுகாதார துறையினர் அந்த வாலிபர்களிடம் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர்கள் சந்தோஷ் (31), ஆகாஷ் (22), ஹமீது (18), சமரத் (40) என்பதும், டெல்லியில் இருந்து வந்துள்ளதும் தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து, அவர்கள் திருவள்ளூர் அருகில் உள்ள அரசு சட்ட கல்லூரி வளாகத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பரவல் உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில், டெல்லியிலிருந்து ரயில் மூலம் இந்த 4 வாலிபர்கள் எப்படி வந்தார்கள் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

Related Stories: