திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் பகுதியில், டெல்லியிலிருந்த வந்த நான்கு வாலிபர்களை சுகாதார துறையினர் தனிமைப்படுத்தி உள்ளனர்.திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் பட்டறை பகுதியில் உள்ள கிரானைட் வணிக வளாகத்திற்கு, டெல்லியில் இருந்து நான்கு வாலிபர்கள் கடந்த 23ம் தேதி ராஜதானி விரைவு ரயிலில் வேலைக்கு வந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த வட்டார சுகாதார மருத்துவர் ராகவ், சுகாதார மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன் மற்றும் சுகாதார துறையினர் அந்த வாலிபர்களிடம் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.