செய்யூர்: செய்யூர் அருகே ஏரிக்குள் சட்டவிரோதமாக தனியார் சிலர், பைப் லைன் அமைத்து ஏரியை சேதப்படுத்தியுள்ளனர். இதனை அகற்றாமல், அதிகாரிகள் மெத்தமாக உள்ளன. இதனால், பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். சித்தாமூர் ஒன்றியம் மாம்ப்பாக்கம் ஊராட்சி சித்தூர் கிராமத்தில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் பெரிய ஏரி உள்ளது. பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரியின் நீர்பிடிப்பு பகுதியின் அருகில், குமுளி கிராமத்தைச் சேர்ந்த சிலர், ஏரியை ஆக்கிரமித்து விவசாயம் செய்தனர்.மேலும், கடந்த சில நாட்களுக்கு முன், கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி, இரவோடு இரவாக ஏரியில் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் நீண்டதூரத்துக்கு பள்ளம் தோண்டி, ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்துக்கு, அவர்களது கிணற்றில் இருந்து தண்ணீர் கொண்டு செல்ல பைப்புகளை புதைக்கும் பணியில் ஈடுபட்டனர்.