சென்னை: நாளை முதல் ஜூலை 15ம் தேதி வரை தமிழகத்தில் ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக அரசின் வேண்டுகோளின்படி இயக்கப்பட்ட சிறப்பு ரயில்கள் நாளை முதல் ஜூலை 15ம் தேதி ரத்து செய்யப்படுகிறது.
அதன்படி, திருச்சி - செங்கல்பட்டு (02606/02605), மதுரை-விழுப்புரம்((02636/02635), கோவை-காட்பாடி ((02680/02679), திருச்சி- செங்கல்பட்டு(06796/06795), அரக்கோணம்- கோவை (02675/02676) கோவை- மயிலாடுதுறை (02083/02084), திருச்சி- நாகர்கோவில்(02627/02628) ஆகிய சிறப்பு ரயில்கள் குறிப்பிட்ட இந்த நாட்களில் ரத்து செய்யப்படுகிறது.