சென்னை: சந்தன கடத்தல் வீரப்பனை பிடிக்கும் பணியில் பங்கேற்ற 62 சப்-இன்ஸ்பெக்டர்கள் தங்களுக்கு இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இவர்கள் சார்பாக வக்கீல் பாலடெய்சி சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட எங்களுக்கு அரசு பதவி உயர்வு வழங்கியது.கடந்த 2004ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை எங்களுக்கு படிப்படியாக சப்-இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு வழங்கப்பட்டது. தற்போது சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறோம். இந்நிலையில், தமிழக அரசு எங்களுக்கு இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு வழங்காமல் கடந்த 2008ம் ஆண்டு சப்-இன்ஸ்பெக்டர் ஆனவர்களுக்கு பதவி உயர்வு வழங்க ஒரு பட்டியல் தயாரித்து வெளியிட்டுள்ளது.