டாஸ்மாக் அலுவலக டிரைவர்களுக்கு கொரோனா அச்சத்தில் அதிகாரிகள்

சென்னை: டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கார் ஓட்டுநர்களாக பணியாற்றும் 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் அதிகாரிகள் அச்சத்தில் உள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் இந்த பாதிப்பு நாள்தோறும் 1,500ஐ தாண்டி காணப்படுகிறது. இதேபோல், அரசு துறை அதிகாரிகள் மற்றும் கீழ் நிலை ஊழியர்கள் வரை பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அதிகாரிகளின் கார் ஓட்டுநர் ஒருவர் கடந்த வாரம் கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளார்.

அதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொடர்ந்து அவருடன் பணியாற்றிய 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தலைமை அலுவலகத்தில் கார் ஓட்டுநர்கள் 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது டாஸ்மாக் தலைமை அலுவலக அதிகாரிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: