கொரோனாவால் உயிரிழந்த ஒளிப்பதிவாளர் வேல்முருகன் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம்: முதல்வர் பழனிசாமி இரங்கல்

சென்னை: தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் வேல்முருகன் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கொரோனா தொற்றால் வேல்முருகன் காலமானார் என்ற செய்தி கேட்டு வேதனை அடைந்தேன். மக்களுக்கும், அரசுக்கும்  இணைப்புப் பாலமாக பத்திரிக்கையாளர்கள் உள்ளனர். ஊடக நண்பர்கள் செய்திகளை சேகரிக்க செல்லும் போது பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

Related Stories: