இன்ஸ்பெக்டர்கள் உட்பட 36 போலீசாருக்கு தொற்று

சென்னை: சென்னையில் ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசாருக்கு கொரோனா தொற்று அதிகளவில் பரவி வருகிறது. அதன்படி, தமிழக காவல் துறை இயக்குநர் அலுவலகத்தில் பணியாற்றி வரும்  இன்ஸ்பெக்டர்  மற்றும் மாநகர காவல் துறையில் பணியாற்றும் 2 இன்ஸ்பெக்டர்கள்  உட்பட  36 போலீசாருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது. இவர்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் மீட்டு ஐஐடி மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும், இவர்களுடன் பணியாற்றிய சக போலீசாரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சென்னை மாநகர காவல் துறையில் இதுவரை 1041 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை தொற்றில் இருந்து குணமடைந்த 410 பேர் பணிக்கு திரும்பி உள்ளனர். நாளுக்கு நாள்  மாநகர காவல் துறையில் நோய் தொற்று தீவிரமடைந்து வருவதால் பாதுகாப்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

Related Stories: