பல்லாவரம்: பல்லாவரம் அடுத்த பம்மலில் கொரோனா பரவும் வகையில் செயல்பட்டு வந்த தனியார் நிறுவனத்தை தாசில்தார் தலைமையிலான வருவாய் துறை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். பல்லாவரம் அடுத்த பம்மல் பஜனை கோயில் தெருவில் தனியாருக்கு சொந்தமான ஏற்றுமதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு, நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 19ம் தேதி முதல் முழு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், ஊரடங்கை பின்பற்றாமல் இந்த நிறுவனம் செயல்பட்டு வந்தது. இங்கு, நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள், முககவசம் அணியாமலும், போதிய சமூக இடைவெளியை பின்பற்றாமலும், எளிதில் தொற்று பரவும் வகையில் நேற்று பணியில் ஈடுபட்டிருந்தனர்.