திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியம் செம்பாக்கம் கிராமத்தில் இருளர் பழங்குடியினர் குடியிருப்பு மக்களுக்கு வீட்டு மனைப்பட்டா சமீபத்தில் வழங்கப்பட்டது. இதையடுத்து இந்த பகுதியில் 30க்கும் மேற்பட்டோ வீடு கட்டி வருகின்றனர். இங்கு சாலை, தெரு மின்விளக்கு, குடிநீர் உள்பட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.