சென்னை: மத்திய அரசின் கீழ் இயங்கும் பள்ளிகளில் ஆசிரியர் பணிநியமனம் பெற மத்திய அரசு நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான தேர்வு மே மாதம் நடக்க இருந்த நிலையில் கொரோனா காரணமாக ஜூலை மாதம் 5ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்தநிலையில், கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்த தகுதித் தேர்வு(சிடிஇடி) ஒத்தி வைக்கப்படுவதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.