சென்னை: சென்னையில் கொ ரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் ஆய்வு மேற்கொண்டார். அதன் பிறகு நிருபர்களிடம் கூறியதாவது: ராயபுரம் மண்டலத்தில் 3,873 இலவச மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு 56,595 நபர்களுக்கு சோதனை செய்யப்பட்டு 6,814 பேருக்கு காய்ச்சல், சளி, இருமல் இருப்பது கண்டறியப்பட்டு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 5 மண்டலத்தில் உள்ள குடிசைப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு இதுவரை 2 லட்சம் பேருக்கு முகக்கவசம் வழங்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் கலந்து கொண்டார்.