காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் சத்துணவு பணியாளர்களை போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளில் ஈடுபடுத்துவதாக சத்துணவு ஊழியர்கள் குமுறுகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நகராட்சி பகுதியில் உள்ள சத்துணவு மற்றும் அங்கன்வாடி மைய பணியாளர்களை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக, பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று வெப்பநிலை பரிசோதனை செய்தல், சத்து மாத்திரைகள், எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்குதல் போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.காஞ்சிபுரம் நகராட்சியில் 250க்கும் மேற்பட்ட சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்கள் உள்ளன. ஒரு மையத்திற்கு 2 பணியாளர்கள் வீதம் 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கை பணியில் பாதுகாப்பு இல்லாமல் பணியாற்றும் அங்கன்வாடி ஊழியர்கள்: அதிகாரிகள் மீது பரபரப்பு குற்றச்சாட்டு
- கொரோனா தடுப்பு பிரச்சாரத்தில் பாதுகாப்பு இல்லாமல் அங்கன்வாடி தொழிலாளர்கள்: ஒரு குற்றவியல் குற்றச்சாட்டு
- பாதுகாப்பு இல்லாமல் அங்கன்வாடி தொழிலாளர்கள்
- கொரோனா தடுப்பு பிரச்சாரம்: ஒரு குற்றவியல் குற்றச்சாட்டு